லண்டனில் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள சொகுசு வீடு மீது வாங்கிய வங்கி கடனை திருப்பி செலுத்தாததால், வீட்டை விட்டு வெளியேற விஜய் மல்லையாவுக்கு (Vijay Mallya) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், 2016ல் பிரித்தானியாவிற்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், லண்டன் Regent Park நகரில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு வீடு மீது 2012-ல் சுவிஸ் வங்கியில் ரூ. 185 கோடி, கடன் பெற்றிருந்தார்.
இதேவேளை, 5 ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலையில், கடனை திரும்ப செலுத்தாததால், 2017-ல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சொகுசு வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டு சுவிஸ் வங்கிக்கு சாதகமாக தீ்ர்ப்பு அளித்தது.
இதையடுத்து சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா, வெளியேறுமாறு கடந்தாண்டு (2021) ஓக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டை விசாரித்த நீதிமன்றம், லண்டன் சொகுசு வீட்டை விட்டு மல்லையா, குடும்பத்தோடு வெளியேற வேண்டும், அதை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.