பீதியில் பிரித்தானிய மக்கள்: ஒரே நாளில் இத்தனை பேர் பலியா?
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 95 ஆயிரத்து 787 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 57 இலட்சத்து 9 ஆயிரத்து 059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 490 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 35 இலட்சத்து 98 ஆயிரத்து 130 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 664 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 565 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 19 இலட்சத்து 57 ஆயிரத்து 439 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.