பிரித்தானியாவில் சிகிச்சை பெற்றுவரும் 36 லட்சத்திற்கும் அதிகமானோர்!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 359 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 55 இலட்சத்து 6 ஆயிரத்தை 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 52 ஆயிரத்து 872 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 36 இலட்சத்து 15 ஆயிரத்து 555 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 703 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 292 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 17 இலட்சத்து 38 ஆயிரத்து 323 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.