யாழில் ஆபத்தான பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நெல்லியடி பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 817 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
நேற்று நெல்லியடி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வடக்கு மற்றும் வடமத்திய கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் 817 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 6.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டள்ளது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பருத்தித்துறை மற்றும் குடத்தனை பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.