யாழில் பொலிஸாருக்கு வெளிநாட்டு மதுபானப் போத்தல்களை விற்க முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி!
யாழில் வெறிநாட்டு மதுபானப் போத்தல்களை பொலிஸாருக்கு விற்க முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகத்தைச் சேர்ந்த நபர், யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகளவு விலை பேசி, வெளிநாட்டு மதுபானப் போத்தல்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு விற்க முற்பட்ட வேளை குறித்த சந்தேக நபர் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்த 6 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.