14 வயது சிறுவனின் உயிரை பறித்த மரம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் ஹொரவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் துட்டுவெவ பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
ஹொரவெவ பகுதியில் வயல்வெளி ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்டர் ஒன்றில் இருந்த 14 வயதான சிறுவன் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுவனை ஹொரவ்பத்தான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.