டொங்கோ சுனாமி; நீரில் அடித்துசெல்லப்பட்ட மாற்றுதிறனாளி; 24 மணிநேரத்தின் பின் மீண்ட அதிசயம்!
டொங்கோவை தாக்கிய சுனாமியால் அடித்து செல்லப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவர் 24 மணிநேரத்திற்கும் மேல் கடலில் தீவுகளிற்கு மத்தியில் நீச்சலடித்து உயிர்தப்பிய சம்பவம் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சுனாமியின் பின்னர் டொங்கோவிற்கும் உலக நாடுகளிற்கும்இடையிலான தொடர்புதுண்டிக்கப்பட்டுஐந்து நாட்களாகின்ற நிலையில் அங்கிருந்து வெளிவந்த முதல் கதையாக இது காணப்படுகின்றது. தப்பிப்பிழைத்த மாற்றுத்திறனாளியான - தச்சுத்தொழிலாளியின் அனுபவத்தை டொங்கோ வானொலி ஒலிபரப்பியுள்ளது.
தனது அந்த பயங்கர அனுபவம் குறித்து அவர் கூறுகையில்,
அந்த நபர் தனது சொந்த தீவான அட்டாவிலிருந்து வேறு இருவருடன் ஆட்கள் வசிக்கா தீவிற்கு கடல்நீரில் அள்ளுண்டு மிதந்து இருக்கின்றார். பின்னர் தாங்கள் பயணித்த இடத்திலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டொங்கடபு என்ற முக்கிய தீவை சென்றடைந்துள்ளார்.
சனிக்கிழமை தனது வீட்டிற்கு பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தபோது சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டதாக பெலாவு தெரிவித்துள்ளார். எனது மூத்த சகோதரரும் உறவினரும் எனது உதவிக்கு வந்தனர். ஆனால் அவ்வேளை சுனாமி அலைகள் எனது வீட்டிற்குள் வந்துவிட்டன. இன்னொரு பெரும் அலை வந்தவேளை நாங்கள் வீட்டின் இன்னொரு பகுதிக்கு சென்றோம்-அந்த அலை ஆறுமீற்றர் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் ஒழுங்காக நடக்க கூட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அலைகள் மேற்கு பக்கமாக வந்ததால் நாங்கள் வீட்டின் கிழக்கு அறையில் ஒளிந்திருந்தோம்.
அதன் காரணமாக அந்த அலையிலிருந்து தப்பினோம். அதன் பின்னர் நான் எனது உறவினருடன் மரத்தில் ஏறினேன். எனது சகோதரர் உதவி கேட்பதற்காக ஒடிச்சென்றார்.
அலைகள் தணிந்ததும் நாங்கள் கீழே இறங்கினோம். அப்போதுதான் மிகப்பெரிய அலை தாக்கியது என அவர் தனக்கு ஏற்பட்ட அந்த பயங்கர அனுபவத்தை வர்ணித்துள்ளார். எங்களிற்கு கீழே அலைகள் வந்தபோது உயிர் தப்புவதற்காக பிடித்துக்கொள்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை.
நாங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டோம் . அது காலை 7 மணி என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் நீரில் மிதந்தோம்,ஒருவரைஒருவர் கூப்பிட்டோம்,பயங்கர இருட்டாக காணப்பட்டது. ஒருவரையொருவர் பார்க்ககுட முடியவில்லை.
சிறிதுநேரத்தின் பின்னர் எனது உறவினர் என்னை அழைப்பது எனக்கு கேட்கவில்லை எனது மகன் அழைப்பது கேட்டது எனவும்அவர்தெரிவித்துள்ளார். அதேசமயம் எனது மகன் என்னை காப்பாற்ற முயன்று ஆபத்தில் சிக்க கூடும் என்பதால் நான் எனது மகனின் அழைப்பிற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு மரக்கொப்பை பிடித்துக்கொண்டு மரணித்தால் எனது குடும்பத்தவர்களிற்கு எனது உடலாவது கிடைக்கும் என நான் கருதினேன் நான் நீரில் மிதந்து வின் கிழக்கு பகுதிக்கு வந்துசேர்ந்தேன் என அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் ரோந்து பிரிவொன்று அட்டட்டா தீவிற்கு செல்வதை கண்டேன். நான் ஒரு தடியை எடுத்து அசைத்தேன் ஆனால் படகில் இருந்தவர்கள் என்னை காணவில்லை.
அது பின்னர் டொங்காவிற்கு வந்தது அதன் போதும் கையசைத்தேன் அவ்வேளையிலும் அவர்கள் என்னை பார்க்கவில்லை என தெரிவித்த அவர், அதன் பின்னர் போலா தீவிற்கு சென்றேன். அங்கு யாராவது இருக்கின்றீர்களா என உதவிக்கு அழைத்தேன் எவரும் இல்லை.
நான் எனதுஉறவினரை நினைத்தேன். இருவரும் நீரில் அடித்துசெல்லப்பட்டோம். ஆனால் தற்போது நான் மாத்திரம் உயிர் தப்பியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். பின்னர் நான் அடுத்து என்ன செய்வது என யோசித்தேன்.
வில் உள்ள சொப்புவிற்கு போய்ச்சேருவேன் என உறுதியாக நம்பினேன் என அவர்தெரிவித்துள்ளார். 9 மணியளவில் நான் சொப்புவின் வீடுஒன்றினை நோக்கி சென்றேன். இறுதியாக வீதியொன்றிற்கு வந்தபோது அங்கே ஒருவர் என்னை வாகனத்தில் அழைத்துச்சென்றார் என அந்த மாற்றுத்திறனாளி தெரிவித்துள்ளார்.
நன்றி- கார்டியன்