60 கிலோ மாட்டிறைச்சியை கடத்திய மூவர் கைது
Police
Smuggling
Arrested
Ratmalana
Dehiwala
Beef
Ammunition
Rangala
Domestic guns
Possession
By Independent Writer
ரங்கல நகரப் பகுதியில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கெப் ரக வாகனத்தில் எருமைமாட்டு இறைச்சியை கொண்டு சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 60 கிலோ 500 கிராம் எடையுடைய எருமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் வசம் வைத்திருந்த உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும், 12 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 65 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US