நீண்ட விடுமுறையில் செல்பவர்களுக்கு வருகின்றது பரிசோதனை
நீண்ட நாள் வார விடுமுறையின் போது பல்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்த மற்றும் மக்கள் பெருமளவு கூடிய இடங்களில் இருந்தவர்களுக்கு விரைவில் வைத்திய பரிசோதனையை மேற்கொள்வது முக்கியமென்று விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சென்றவர்களுக்கு காச்சல் அல்லது சுவாசம் தொடர்பிலான நோய் நிலைமை அவதானிக்கப்படும் பட்சத்தில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கான ஒட்சிஜன் தேவையில் சிறிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது சுகாதார கட்டமைப்பிற்கு அழுத்தமாக இல்லாத போதிலும் இந்த நிலை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 8 நாட்களுக்குள் போட் சிற்றி நகரை பார்வையிடுவதற்காக 89,540 பேர் வருகை தந்திருந்தததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.