ஒன்லைனில் கைக்கடிகாரம் ஓடர் செய்த நபர்; ஆவலுடன் பார்சலை பிரித்தவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!
இந்தியாவின் கேரளாவில் இணையளத்தளத்தில் கைக்கடிகாரத்தை ஓடர் செய்த நபருக்கு , ஆணுறைகள் அனுப்பிவைக்கட்டிருந்த சம்பவத்தால் குறித்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் இணையளத்தளத்தில் கைக்கடிகாரம் ஒன்றை ஓடர் செய்துள்ளார்.
அதற்காக அவர் ரூ.2,400-ஐ முன்கூட்டியே செலுத்தினார். 15 ஆம் திகதி அவரது கைக்கு கைக்கடிகாரம் வந்து சேருமென இணையளத்தள நிறுவனம் கூறி இருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட நாளில் அவருக்கு பொதி வந்துள்ளது. நமது புதிய கைக்கடிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் ஆர்வமுடன் பொதியை பிரித்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் பொதியில் இருந்து சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள் இருந்தமையை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து அனில்குமார், கைக்கடிகாரத்தை பதிவு செய்த அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.