70 வயது பாட்டியின் மோசமான செயல் ; தீவிரமாக தேடும் பொலிஸார்!
இந்தியாவில் 29 வயது பேரனுக்கு திருமணம் முடிப்பதற்காக 14 வயது பேத்தியை கடத்திய 70 பாட்டியை இந்திய ஆந்திரா மாநில பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூரை சேர்ந்த 14 வயதான சிறுமியை 29 வயது பேரனுக்கு திருமணம் முடிக்க 70 வயது பாட்டி ஒருவர் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தனது பேரனுக்கு திருமணம் செய்வதற்காக சிறுமி என்றும் பாராமல் தன்னுடைய சொந்த பேத்தியை கடந்த 6ஆம் திகதி ரகசியமாக கடத்திச் சென்றுவிட்டார் அவரது பாட்டி. அப்போது முதல் அவருடைய மகன் , மருமகள் , பேரன் ஆகியோரையும் காணவில்லை.
கடத்தப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள திருச்சானூர் பொலிஸார், சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், நான் ஒரு விதவை, என் மகள் மற்றும் 8 வயது மகனுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்காக என் கணவரை இழந்ததிலிருந்து நான் வீட்டு வேலை செய்து வருகிறேன்.
ஆனால் இன்று என் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கைகள் அனைத்தும் என் மகளின் கடத்தலால் அழிந்துவிட்டன.
இப்போது நான்கு நாட்கள் கடந்துவிட்டன, என் மகள் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் இல்லை என்ரும், தனது மகளை மீட்டு விரைவில் என்னுடன் மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் அவர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.