பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் ஆங்கிலம், அரபு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன் பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன், இத்தாலி, சீனம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மொழிகளைக் கற்க வாய்ப்பு கிடைக்கும்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் ஓன்லைனில் தொடங்கப்படும்.
சர்வதேச கல்வி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.