பிரித்தானியாவில் திடீரென அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கை!
பிரித்தானியாவில் பெரும்பாலான மக்கள் தடுப்புசி போடுக்கொண்டதால் சில மாதங்களாக கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்துவந்த நிலையில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களாக பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவலில் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றாளர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது.
இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றினால், 49ஆயிரத்து 298 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ள நிலையில் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 86 இலட்சத்து 89ஆயிரத்து 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 39ஆயிரத்து 326 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து 64ஆயிரத்து 527 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 892 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 28 ஆயிரத்து 510 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 7 இலட்சத்து 86ஆயிரத்து 96 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.