வெற்றிகரமாக நிறைவு பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை!
2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,943 நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று 340,507 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி சிங்கள மொழி மூலம் 255,062 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 85,446 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட விருந்த நிலையில், கொவிட்-19 தொற்றுப் பரவலால் பல சந்தர்ப்பங்களில் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை கொவிட்-19க்கு தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு வசதியாக 108 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டன.
அதே நேரத்தில் மொத்தம் 496 ஒருங்கிணைப்பு நிலையங்கள் முழு பரீட்சை செயற் பாட்டிலும் இருந்ததாகவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.