இலங்கை விரைவில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் - சீனா
இலங்கை நிச்சயம் தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து புதிய மற்றும் சிறந்த அபிவிருத்தியுடன் முன்னேறும் என சீனா தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் கூட்டு முயற்சியுடன், நாடு நிச்சயமாக தற்காலிக சிரமங்களை விரைவாக சமாளித்து முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சீனாவின் அரச சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைத் தலைவர்களுடன் உரையாடியதாகவும் அவர் கூறினார். 2014 இல் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரச விஜயமானது இருதரப்பு ஒத்துழைப்பிலும் பிராந்தியத்தின் தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் ஐக்கியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனாவின் வலுவான ஆதரவிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தது.
கடன் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த வெண்பின், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து சீனாவும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தன்னால் இயன்றளவு உதவிகளை வழங்கி வருவதாகவும், எதிர்காலத்திலும் அதனைத் தொடரும் எனவும் அவர் கூறினார்.