சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான இடமாக இலங்கை உள்ளது
உலக சுற்றுலாத்துறையில் பாதுகாப்பான புகலிடமாக இலங்கையை முத்திரை குத்தியுள்ளதால் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் இணை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டு 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்குவதற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஏற்றுமதி வருவாய் மற்றும் பணம் அனுப்புதல் போன்றவற்றில் ஏற்கனவே முன்னேற்றம் காணப்படுவதால் 2022 இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வெளிநாட்டு கையிருப்பு திருப்திகரமாக உயரும் போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைப் போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.