இலங்கையில் இருந்து நாடு திரும்பவுள்ள இந்திய மீனவர்கள்!
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 56 மீனவர்களில் 55 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஜனவரி 25 ஆம் திகதி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நேரம் இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இயக்கச்சி இடைத் தங்கல் முகாமில் பராமரிக்கப்பட்டு மீண்டும் பரிசோதனையின் பின்பு 43 பேரும் மீரியானைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேநேரம் எஞ்சிய 13 பேரிற்கு மேற்கொண்ட பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் 13 பேரில் 9 பேரும் இயக்கச்சியில் இருந்து வெளியேறிய 43 பேருமாக மொத்தம் 52 பேர் எதிர்வரும் 10ஆம் திகதி இரவு நாடு திரும்பவுள்ளனர்.
இதேவேளை இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மேலும் 32 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.