கையை விரித்த சீனா: இலங்கையில் அடுத்த நடவடிக்கை?
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர் பிரச்சினையை கண்டும் காணமாலும் இலங்கை அரசு செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனை முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் ( Kumar Gunaratnam) கூறியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை (07-02-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சீனாவின் ஆதரவு போதுமானளவு கிடைக்காத நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற போதிலும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாத நெருக்கடிக்குள் இலங்கை அரசு சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்