திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!
Srilanka
School
Hospital
Vattavala
Studnets
By Sulokshi
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ரொசல்ல- பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 12 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மாணவர்களின் உடல் நிலையில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும், அப் மலையகத்தில் காணப்படும் கடும் வெயிலுடனான வானிலையால் மாணவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என்றும், பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 8 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US