வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்?
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களில் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாவதன் காரணமாக, அவர்கள் தொடர்பில் முகாமைத்துவ நடவடிக்கை செய்ய நேரிடுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு வைரஸ் தொற்று சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் எஸ்.எம் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.