நேற்றிரவு ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
வயல்வெளி ஒன்றில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு வெள்ளிக்கிழமை (11-02-2022) பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்றிரவு இருவர் மின்சாரம் தாக்கி வயல்வெளியில் விழுந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காயமடைந்த இருவரையும் பொலிஸார் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெல்மடுல்ல, படலந்த பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வுக்காகச் சென்ற போதே இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.