நிதியமைச்சர் பசிலுக்கு வந்த சோதனை; நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ வகிக்க முடியாது என தெரிவித்து உலப்பனே சுமங்கல தேரர் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, இது தொடர்பான நோட்டீஸை கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அத்துடன், குறித்த மனுவை வரும் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.