நாமலுக்கு தலைவர் பதவி... வழங்கி வைத்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செயலணி ஏப்ரல் 09 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. ஊருடனான உரையாடல் வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வெற்றிகொள்ள மற்றும் மக்களின் தேவைகளுக்கு திறமையாகவும் திறம்பட வழிநடத்தும் நோக்குடனும் இச்செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்செயலணிக்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிமல் லன்சா, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, சீதா அரம்பேபோல, சன்ன ஜயசுமான, காதர் மஸ்தான், கபில அத்துகோரல, சஞ்சீவ எதிரிமான்ன, நிபுண ரணவக்க, சாமர சம்பத் திசாநாயக்க, டிரான் அலஸ், கெவிது குமாரதுங்க, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), சிந்தக்க அமல் மாயாதுன்னே மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோரே இச்செயலணியின் அங்கத்தவர்கள் ஆவர்.