உகந்தமலை முருகனாலய ஆடிவேல் தீர்த்தோற்சவம்
கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்தத்தோற்சவம் நேற்று சமுத்திரத்தில் இடம்பெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையிலான குருக்கள் தலைமையில் மிகவும் சொற்பளவு பக்தர்கள் கடற்கரையில் சுன்னமிடித்து சமுத்திரத்தில் தீர்த்தமாடினர். வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் கடந்த 10ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி தினமும் திருவிழாக்கள் பூஜைகளுடன் எளிமையாக நடந்தேறிவந்தது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையிலான குருக்கள் திருவிழாவை சிறப்பாக நடாத்திவந்தார். நாட்டின் கொவிட் நிலைமை காரணமாக பக்தர்கள் மற்றும் பாதயாத்திரீகர்களுக்கு அரசசுற்றுநிருபப்படி 50பேருக்குள் மட்டுப்பட்டுத்தப்பட்டிருந்தது..
ஆலய குருக்கள் நிருவாகசபையினர் உபயகாரர்கள் என 50பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஆலயத்துள் அனுமதிக்கப்பட்டனர்.
பொலிசார் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு மற்றும் வீதிச்சோதனை கடமையில் ஈடுபட்டுவந்தனர்