பிரித்தானியாவில் எம்.பி படுகொலை: ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம்
லண்டனின் கடற்கரை நகரமான Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் கடந்த (15) வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற கூட்டத்தில் 25 வயதான இளைஞன் ஒருவரின் கத்திக்குத்து தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமஸ்க்கு (Sir David Amess) சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் வெளியிட்டுள்ளது.
இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சேர் டேவிட் அமஸின் இப்பால் (Sir David Amess) துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கல்விக்கூடம் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர்களுக்கு மிகவும் சிறந்த நண்பராக சேர் டேவிட் அமஸின் இப்பால் விளங்கினார். குறிப்பாக எமது கல்விக்கூடத்துடன் மிகவும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்தார். அவர் எமக்கு செய்த உதவிகளுக்காக நாம் எப்போதும் அவருக்கு நன்றியுடையவர்களாக கடமைப்பட்டுள்ளளோம். எனவே இந்த நேரத்தில் எமது துயரை வெளிப்படுத்தி நிற்கின்றேம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.