இலங்கைக்கு இரு வாரங்களில் 7 அயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சரிந்த சுற்றுலாத்துறை இப்போது படிப்படியாக மீண்டு வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 45 ஆயிரத்து 413 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அவர்களில் 7 ஆயிரத்து 96 பேர் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை வருகை வந்துள்ளனர். பெரும்பாலான வருகைகள் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இருந்தன.
இதேவேளை நாட்டிற்கு கனடா, பிரான்ஸ், இந்தியா, கஜகஸ்தான், ஜெர்மனி, உக்ரைன், அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வருகைத் தந்துள்ளனர்.
இலங்கையில் விரைவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான போக்கு அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கையில் அடுத்த 2 மாதங்களுக்குள் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க தேவையான விளம்பர திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.