யாழில் இரவு வேளையில் தீவிர கண்காணிப்பில் சிவாஜிலிங்கத்தின் வீடு
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீடு இராணுவப் புலனாய்வாளர்கள், பொலிஸ் புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பிற்குட்பட்டுள்ளது.
நேற்று மாலை தனது வீட்டின் முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் தொடக்க நாளில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, அவரது வீட்டின் முன்பாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.