மீண்டும் தலை தூக்கும் 'வெள்ளை வான்; கவலை வெளியிட்ட அருட்தந்தை சிறில் காமினி
இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்றையதினம் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம வீட்டுக்குள் நுழைந்த இனம் தெரியாத கும்பல் தாக்குதலை மேற்கொண்ட நிலையில், சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பிலுமேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, தெரிவித்தார்.
அதேசமயம் இம் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு சற்று முன்னர் இடம்பெற்றுள்ள இந்த சம்பவங்கள் , சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பிரச்சாரம் செய்த ஒருவர் கைது செய்யப்படுவதும், மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க ஊடகங்களைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
இதேவேளை இன்றையதினம் சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.