வட்டுவாகல் கடற்படை தளத்துக்கான காணி அளவீட்டு பணி; தமிழ் கட்சிகள் போர்க்கொடி
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை தளத்திற்கான காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கு தமிழ் கட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.
குறித்த கடற்படை தளத்திற்காக 617 ஏக்கர் அளவிலான காணிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர்கு , காணி அளவீட்டு பணிகளுக்கு தமிழ் தேசிய கட்சிகள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் , இன்று காலை முதல், முல்லைத்தீவு மற்றும் வட்டுவாகல் வீதிகளில் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு விசேட சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.