பதவி நீக்கியவரை மீண்டும் அதேபதவிக்கு நியமித்த கோட்டாபய!
Goverment
Gotabaya Rajapaksa
Desara Jayasinghe
Litro Enterprise
By Sulokshi
இன்று காலை பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தெசார ஜயசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்படுவதாகவும் புதிய தலைவராக ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்து, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவால் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்துக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரின் ஆலோசனைக்கமைய பதவி நீக்கப்பட்ட அவர், மீண்டும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US