கனடாவில் யாழ் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பெரும் துயரம்; சோகத்தில் குடும்பம்
கடந்த மாதம் கனடா - மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான யாழ்ப்பாண தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி நடந்த குறித்த விபத்தில் சுரேஷ் தர்மகுலசிங்கம் என்னும் இலங்கை தமிழர் உயிரிழந்தார். அவர் 2010 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது, 2008-2012 குழசன நுளஉயிந ளுருஏ என்ற கார் அவர் மீது மோதியுள்ளது.
கறுப்பு நிறத்தில் இருப்பதாக நம்பப்படும் காரின் சாரதி, விபத்துக்குள்ளன சுரேஷ் தர்மகுலசிங்கத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தர்மகுலசிங்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் 24 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை உயிரிழந்தவர் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தின் காரணமாக வாகனத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் கலந்தாலோசித்து பொலிஸில் சரணடையுமாறு விசாரணையளர்கள் கோரியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு காணொளி அல்லது வேறேதேனும் காணொளி இருப்பவர்கள் பொலிஸார் அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருமணமாகி சில தினங்களில் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.