சர்வதேச விமானங்களுக்கான தடையை மீண்டும் நீட்டித்த இந்தியா!
இந்தியா சர்வதேச விமானங்களுக்கான தடையை மீண்டும் வருகின்ற பிப்ரவரி-28,2022 வரையில் நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து இன்று (19/01/22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ள சிறப்பு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்ற
விமானங்கள், Air-Babble ஒப்பந்தப்படியான வளைகுடா உள்ளிட்ட சில நாடுகளுக்கான விமானங்கள் மற்றும் சரக்குகளை எடுத்து செல்கின்ற விமானங்களுக்கான சேவைகள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து இயக்கப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.