சமூக வலைதளங்களால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம்.நவாஸ், இதனை கூறினார் சமூக வலைத்தளங்களின் பாவனை மூலம் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு தனிநபரின் படங்களை தவறாகப் பயன்படுத்தி துன்பத்தை ஏற்படுத்துவது அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் தமக்கு கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்