அத்தியாவசிய சேவையாக 250 கால் போத்தல்களை எடுத்துச்சென்ற இளைஞர் கைது
முல்லைத்தீவில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால் போதல் சட்டவிரோதமாக கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடு நேரத்தில் அத்தியவசிய சேவையாக மீன்களை ஏற்றி சென்று விற்பதற்கான அனுமதி பாத்திரத்தை பயன்படுத்தி புட்டுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவை நோக்கி சென்ற சமயத்தில் அதிரடி படையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முல்லைத்தீவு,முள்ளியவளை மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் மதுபான போத்தல்கள் 5000 முதல் 1000 ரூபா வரையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.