கடந்த இரண்டாண்டுகளில் இலங்கை மக்கள் அதிகமாக செலவு செய்தது எதற்காக தெரியுமா ?
கொரோனா பெருந்தொற்று நிலைமையின் காரணமாக இலங்கை மக்கள் இரண்டாண்டு காலப்பகுதியில் பெருந்தொகை பணத்தை முகக் கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளனர்.
கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18,000 கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர்.
இந்த தகவலை நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 25 கோடி ரூபாவினை முகக்கவசம் கொள்வனவு செய்வதற்காக மக்கள் செலவிடுகின்றனர்.
மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் நாளாந்தம் முகக் கவசம் கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.
எனவே முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதன் மூலம் மக்களின் சுமையை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.