ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்படும் நாள் எப்போது; வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது. இத்தகவலை டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.
டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் (16), கொழும்பில் முன்னாள் அமைச்சர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பலத்த தீக்காயங்களுக்கு ள்ளான நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சிறுமியின் உடல் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எனினும் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணையில் பல சிக்கல்கள் உள்ளதால், சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து , சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.