சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக்குள் புதிய கொரோனா வகைகள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படுவதாலும் துறைமுகங்கள் மீண்டும் செயல்படுவதாலும், புதிய கொரோனா வகைகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன (Asela gunawardena) சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான காலகட்டத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்குமாறு பொது மக்களிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.