கொட்டகலையில் கைது செய்யப்பட்ட போலி வைத்தியர்
ஹட்டன் கொட்டகையின் வர்த்தக பகுதியில் வைத்தியர் என அடையாளப்படுத்தி இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று பிற்பகல் தலவாக்கலையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், ஹட்டன் கொட்டகை வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்தியர் எனவும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதாகவும் அறிமுகம் செய்துள்ளார். இதற்கிடையில் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்தார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 338 போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் வாங்க வந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் ஹட்டன் கொட்டகைப் பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.