அம்பாறை பகுதியில் கசிப்பு பெரல் வெடித்ததில் நபர் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவு வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இதில் வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே உயிரிந்துள்ளார். அத்தோடு குறித்த பிரதேசத்திலுள்ள தந்தையும் மகனும் அவர்களுடன் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் சம்பவதினமான இன்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
மேலும் இதன்போது கசிப்பு உற்பத்திக்கான பெரல் வெடித்து சிதறி தீ பரவியதை அடுத்து சம்பவ இடத்திலேயே 56 வயதுடை தந்தை உயிரிழந்துள்ளார்.
அத்தோடு இது தொடர்பான் மேலதிக விசாணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.