பாலத்தில் தவறி விழுந்த டிலான்; வழங்கிய வாக்குறுதி
பதுளை- ஹாலிஎல- ரஜமாவத்தையில் வெள்ளையர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை பார்வையிடச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தவறி விழுதுள்ளார்.
சுமார் 113 அடி நீளமான குறித்த பாலம் பழுதடைந்து உள்ளதால், அதனூடாகப் பயணிக்கும் பிரதேசவாசிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
குறித்த பாலத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று இடம்பெற்ற போது, அதனை கண்காணிப்பதற்காக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான், அங்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது, பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கமைய, பாலத்தில் டிலான் எம்.பி நடந்த போது, திடீரென கால் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சாமிக புத்ததாச உள்ளிட்டவர்கள் டிலானை காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில்,கீழே விழுந்து இந்த பாலத்தின் நிலைமையை தான் நன்றாக புரிந்துக்கொண்டதால், விரைவில் அதனை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் பிரதேசவாசிகளிடன் டிலான் பெரேரா வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.