சுமந்திரனிற்கு கடைசி நேரத்தில் ஆப்பு வைத்த மாவை
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து மூல்லைத்தீவில் முதல் பருத்தித்துறை வரை மேற்கொள்ளப்பட்ட கடல் வழியான படகு பேரணி இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா (Mavai Senathirajah) கலந்து கொள்ளவில்லை என சந்தேக எழுந்துள்ளது.
மேலும் இந்த கடல் வழியான படகு பேரணியை எம்.ஏ.சுமந்திரன் (A.M.Sumanthiran) தரப்பு இன்று முல்லைத்தீவிலிருந்து படகுச்சவாரி மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்ட படகுகளிற்கான எரிபொருட் செலவும் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது.
இந்த போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு முன்னெடுக்கப்படவில்லை. கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தி, தனி அணியாக செயற்படும் தரப்புக்களின் பின்னணியில் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் இந்த போராட்ட ஏற்பாடு தெரியாது என்று நேற்று முன்தினம் இலங்கை செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், எம்.ஏ.சுமந்திரனின் பத்திரிகையில் நேற்று, மாவை தலைமையில் போராட்டம் இடம்பெறுமென குறிப்பிடப்பட்டிருந்தது. மாவைக்கு தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர், நேற்று முன்தினம் நடந்த இணையவழி கலந்துரையாடலில் அவரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது அதிருப்தியை அங்கு வெளிக்காட்டவில்லை.
எனினும், போராட்டத்தை தலைமை தாங்குவேன் என கூறியிருக்கவில்லை. ஆனால், மாவை அவ்வாறு கூறியதாக யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகையொன்று போலிச் செய்தி வெளியிட்டிருந்தது. இன்று காலை முல்லைத்தீவிலிருந்து படகுச்சவாரி ஆரம்பித்தது. போராட்டத்தை ஆரம்பித்து வைக்க மாவை சேனாதிராசா பொயிருக்கவில்லை. அவர் மட்டுமல்ல, கட்சியின் உயர்மட்ட பொறுப்பிலுள்ள யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை.
கடல் வழியான படகு பேரணி பருத்தித்துறை முடிவு பெற்றது ஆனால் அங்கும் அவர் போகவில்லை. போராட்ட பின்னணி எதுவாகினும், அது முன்னிறுத்திய சுலோகம் மீனவர் விவகாரம் என்பதால் அதை குழப்பும் விதமாக கருத்து தெரிவிக்காமல், படகு பேரணியில் கலந்து கொள்ளாமல் மாவை ஒதுங்கிக் கொண்டார்.
இதேவேளை, இன்றைய போராட்டத்தை மாவை தலைமை தாங்குவார் என போலிச் செய்தி பரப்பிய தரப்புக்கள், மாவை காய்ச்சல் காரணமாக கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் என புதிய கதையொன்றை பரப்ப திட்டமிடுவதாக தெரிய வருகிறது. படகு பேரணி ஏற்பாட்டாளர்களால் நாளை விவசாயிகள் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.