மட்டக்களப்பில் ஆற்றில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின்!
மட்டக்களப்பு சீலாமுனை ஆற்றின் கரையோரப் பகுதியில் சுமார் 4 அடி நீளமான டொல்பின் மீன் கரை ஒதுங்கியுள்ளது.
மட்டக்களப்பு முகத்துவாரத்தை அண்டியுள்ள பாதியிலேயே இந்த டொல்பின் மீன் இன்று(28) மாலை 5.30 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் ஆமை மீன்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில் முகத்துவாரத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் டொல்பின் மீன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.