ரஜின் மகள் ஐஸ்வர்யாவின் அடுத்த அதிரடி!
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த செய்தி அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதேவேளை வருகிற காதலர் தினத்தன்று “காதல் பாடல்” ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா.
மேலும், இதற்கான வேலைகளில் ரஜினி மகள் ஜஸ்வர்யா மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை படப்பிடிப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம்.
இதேவேளை, விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர், தன்னுடைய வேலைகளில் ஐஸ்வர்யா கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான முன்னோட்டமாக இந்த பாடல் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.