யாழில் தொடரும் கொரோனா அபாயம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் 1வயது மற்றும் 2 வயது குழுந்தைகள் இருவர் அடங்கலாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர்களுடன் சேர்த்து , வடக்கில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவ்வாறு 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் - 14 பேர் (ஒன்று மற்றும் 2 வயது ஆண் குழந்தைகள் உட்பட) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர் (16 வயது சிறுமி மற்றும் 72 வயது முதியவர்)
கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் - ஒருவருமே (33 வயது பெண்) இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.