ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வந்த கொரோனா; திணறும் சீனா!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சீனாவில் கடந்த ஒரே நாளில் 73 பேரை பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவின் வுஹானில் முதன்முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 73 பேரை கொரோனா பாதித்துள்ளதாக கூறப்படும் நிலையில், சீனாவில் மொத்தமாக கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,484 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும் கடந்த ஒரே நாளில் மட்டும் 97 பேர் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டுள்ள நிலையில், சீனாவில் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 3,173 ஆக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.