சர்ச்சையை ஏற்படுத்திய அழகுராணிப் போட்டி; கிரீடத்தை பறித்த சூலா அதிரடி அறிவிப்பு
இலங்கையில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய திருமதி அழகுராணிப் போட்டியை மீள நடத்தும்படி சூலா பத்மேந்திரா தெரிவித்துள்ளார்.
புஷ்பிக்கா டி சில்வாவிடம் இருந்து கிரீடத்தை பறித்த குற்றச்சாட்டில் சூலாவும், முன்னாள் திருமதி அழகுராணி கரொலினா ஜுலியும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
இருவர் மீதான வழக்கு விசாரணை வருகின்ற 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் இயங்கும் ஊடகமொன்றுக்கு சூலா பத்மேந்திரா நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
5000 டிக்கட் விற்பனை செய்து பிரவேசித்தவர்களுக்கு குறைந்த பட்சம் தண்ணீர் போத்தல்கூட கொடுக்கப்படவில்லை. இறுதியாக நான் எனது அம்மாவிடம் இருந்தே பணம் பெற்று குடிதண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கினேன். அப்படியிருக்கையில் எவ்வாறு நான் மதுபானம் அருந்தியிருப்பேன்? மதுபானம் அருந்தவில்லை. அந்தக் குற்றச்சாட்டையும் அத்துடன் நடந்துமுடிந்த அழகுராணிப் போட்டியில் பணமோசடிகூட இடம்பெற்றிருக்கலாம். இதுவரை கணக்கீடும் செய்யப்படவில்லை. சிங்களத்தில் இரு அழகுராணிப் போட்டியில் ஈடுபட்டவர்கள் பேசிய போதிலும் நடுவர்களாக இருந்த வெளிநாட்டு நடுவர்களுக்கு அதனை புரிந்துகொள்ள முடியாமற் போனது.
காரணம், உரை மொழி பெயர்ப்பு சந்தர்ப்பம் இருக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் புஷ்பிக்கா விவாகரத்து விடயமானது இறுதி சந்தர்ப்பத்தில்தான் தங்களுக்குத் தெரியவந்ததாகவும், அதன் காரணமாக தவறினை சரிசெய்யவே மகுடத்தைத் திரும்பப்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.