தேவாலய கைக்குண்டு விவகாரம்: சந்தேகபர் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம்!
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரத்தில் கைதான சந்தேக நபர் ஒன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொரளை தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதான சந்தேகநபர் , கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது நீதவான் அறையில் வைத்து சந்தேக நபர் , ஒன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகின்றது.
அதேவேளை சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட வைத்தியரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் கூர்மையாக ஆயுதங்கள், வாள்கள், கத்திகள் என்பன அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.