முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையி, மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரிய வருகையில், முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்விகற்கும் உயர்தர மாணவன் கௌரிதாசன் கரிஸ்(17 வயது) நேற்று முன்தினம் (18) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீதியில் வைத்து குறித்த மாணவனை இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமான தாக்கியுள்ளார்.
அவரின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று (19) மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தாம் செய்த முறைப்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.