அமெரிக்க கத்தோலிக்க திருச்சபை பேராயருடன் ரகசிய பேச்சு; வத்திகானுக்கு புறப்படும் பேராயர் ; ராஜபக்க்ஷ அரசுக்கு சிக்கலா?
கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இம்மாத இறுதியில் வத்திகானுக்கு பயணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பயணத்தின் போது, புனித பாப்பரசர் உட்பட வத்திகானின் உயர் அதிகாரிகளை சந்தித்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தற்போதைய நிலைமை சம்பந்தமாக தெளிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேசமயம் அமெரிக்கா கத்தோலிக்க திருச்சபை பேராயருடன் கடந்த சில தினங்களாக தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, பேராயர் ஈஸ்டர் விவகாரம் குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கத்தோலிக்கர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அதேவேளை கர்தினாலின் வத்திகான் பயணம், இலங்கை அரசுக்கு மேலும் சிக்கலை உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.