நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பில் தீயாய் பரவும் தகவல்
நடிகர் தனுஷ் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு தன்னோடு 18 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த மனைவி ஐஸ்வர்யாவைப் பிரியப் போவதாக உத்தியோகபூர்வமாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதேபோல் ஐஸ்வர்யாவும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் பிரிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல்வேறு தரப்பான தகவல்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இருவரிடமும் இதுகுறித்து பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம். மேலும் தனுஷிடம் ரஜினிகாந்த் செய்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ரஜினியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.